புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2020

நான் உயிரோடு இருக்கும்வரை தமிழரசுடன் கூட்டணி இல்லை-சங்கரி

www.pungudutivuswiss.com
நான் உயிரோடு இருக்கும்வரை தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை தமிழரசுக் கட்சியுடன் எந்தச் சந்தர்ப்பத்திலும் இணையாது’’ என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

‘‘சம்பந்தனும் சேனாதிராசாவும் வன்னியில் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமானவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் யுத்தத்தை நிறுத்த விரும்பவில்லை.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது வெளிநாடுகளில் சுக போக வாழ்க்கை அனுபவித்த வர்கள். எனவே அவர்களின் தலைமையைக் கொண்ட தமிழரசுக் கட்சியுடன் எந்தக் காலத்திலும் இணைவதற்கு அனுமதிக்கமாட்டேன்.

ஆனால் இணைப்பதற்கு சிலர் தற்போது முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். எனினும் நான் உயிருடன் இருக்கும் வரை அந்த முயற்சி கைகூடாது. சம்பந்தனும் சேனாதிராசாவும் தங்களுடைய பதவிகளை துறக்கவேண்டும். ஏனெனில், தமிழ் மக்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள். தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு அவர்கள் தான் காரணம்.

தன்னைக் கட்சியின் துணைத் தலைவர் எனக் கூறிச் செயற்படும் அரவிந்தன் என்பவர் கடந்த 16 வருடங்களாக லண்டனில் சுகபோக வாழ்க்கையை அனுபவித்துவிட்டு தற்போது இங்கே வந்து தன்னை ஒரு மக்கள் மீது அக்கறையுள்ள பிரமுகர் என நிரூபிப்பதற்குச் செயற்படுகின்றார். நான் உயிரோடு இருக்கும் வரை எந்த காரியமும் இடம் பெறாது. அத்தோடு எமது கட்சியில் அவருக்கு துணைத் தலைவர் என்ற பதவி எதுவும் வழங்கப்படவில்லை” என்றார்.

ad

ad