புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2021

இரு நாட்டு பாதுகாப்பு படையும் சேர்ந்து தான் அகதிகளை கொண்டு வந்து விட்டு காசை சம்பாதித்தார்கள்

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவிற்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழையும் பிரச்சனை இருந்து வரும் நிலையில் உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் அதனை கட்டுப்படுத்திட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் பிரான்ஸ் கடற்படையுடன் சேர்ந்து கொண்டு பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படை சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை பாதுகாப்பாக பிரித்தானியாவிற்கு அழைத்து வந்தால் என்ன செய்வது என்பது தெரியாமல் குழப்பம் இருந்து வருகிறது. இந்த சம்பவத்தினை இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் மிகவும் சாதுரியமாக அரங்கேற்றி வருகின்றனர்.
அதன்படி பிரான்சில் உள்ள Boulogne துறைமுகத்திலிருந்து பிரெஞ்சு மீட்பு படகான Abeille Liberte புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 30 புலம்பெயர்வோர் ரப்பர் படகு ஒன்றில் பயணிக்க சட்ட விரோதமாக ஆங்கிலக் கால்வாயின் பிரித்தானிய பகுதிவரை பிரெஞ்சு மீட்பு படகான Abeille Liberte அவர்களுடன் பாதுகாப்பாக பயணித்துள்ளது.

ad

ad