 கிளிநொச்சி மாவட்டத்தில், அண்மைய நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இன்று காலை இரணைமடு குளத்தின் நீர் மட்டம், 22 அடி 9 அங்குலமாக உயர்ந்துள்ளது
|
இதேபோல், கல்மடு குளத்தின் நீர்மட்டம், 18 அடி 4 அங்குலமாகவும் பிரமந்தனாறு குளத்தின் நீர் மட்டம், 07 அடி 04 அங்குலமாகவும் கனகாம்பிகை குளத்தின் நீர் மட்டம், 10 அடி 9 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது. அத்துடன், அக்கராயன் குளத்தின் நீர் மட்டம், 16 அடி 9 அங்குலமாகவும் கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் மட்டம், 3 அடி 11 அங்குலமாகவும் புதுமுறிப்பு குளத்தின் நீர் மட்டம், 16 அடி 01 அங்குலமாகவும் குடமுருட்டி குளத்தின் நீர் மட்டம், 6 அடி 4 அங்குலமாகவும் வன்னேரிககுளத்தின் நீர் மட்டம், 09 அடி 1 அங்குலமாக உயர்ந்துள்ளதாக, மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. |