வரவு செலவுத் திட்டத்தை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது மாற்றப்படாத அமைச்சுக்களின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
அதற்கமைய 30 அரச கூட்டுத்தாபனங்களின் ஆசனங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த பிரிவினரால் ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.