அதன்படி 10, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப்படுவதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி நாளைதேசிய போராட்ட தினமாக பிரகடனப்படுத்த ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு வலயக் கல்வி அலுவலகம் முன்பாகவும் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது |