புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2021

இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

www.pungudutivuswiss.com


கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

அதன்படி 10, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப்படுவதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி நாளைதேசிய போராட்ட தினமாக பிரகடனப்படுத்த ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு வலயக் கல்வி அலுவலகம் முன்பாகவும் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ad

ad