புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2023

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்குச் சாட்சியம்! மாவை சேனாதிராசா சுட்டிக்காட்டு

www.pungudutivuswiss.com

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, இங்கு தமிழ் மக்கள் மீது இன அழிப்பு இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இருக்கின்றது.

ஆகவே இந்த மனிதப் புதைகுழியை ஆய்வுசெய்பவர்கள் நேர்மையாகவும், விஞ்ஞான ரீதியிலும் எந்தவித குறுக்கீடுகளுக்கும், தலையீடுகளுக்கும் இடமளிக்காது, பகிரங்கமாக உண்மைகள் வெளிப்படக்கூடியவகையில் ஆய்வுசெய்யப்படவேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு மாவை சேனாதிராஜா, விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார், குறித்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

தமிழினத்தின் விடுதலைக்காக இடம்பெற்ற போராட்டத்தில், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கானவர்கள் அழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதற்கான ஒரு சாட்சியாகவே கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியைப் பார்க்கமுடிகின்றது.

இவ்வாறு எமது தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதற்கான ஒரு சாட்சியம் கண்டுபிடிக்கப்பட்டமையால் அகழ்வாய்வுகள் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன. எலும்புக்கூடுகள், ஆடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை சாட்சியங்களாகப் பெறப்படுகின்றன

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, இங்கு தமிழ் மக்கள் மீது இன அழிப்பு இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இருக்கின்றது.

ஆகவே இந்த மனிதப் புதைகுழியை ஆய்வுசெய்பவர்கள் நேர்மையாகவும், விஞ்ஞான ரீதியிலும் எந்தவித குறுக்கீடுகளுக்கும், தலையீடுகளுக்கும் இடமளிக்காது, பகிரங்கமாக உண்மைகள் வெளிப்படக்கூடியவகையில் ஆய்வுசெய்யப்படவேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு மாவை சேனாதிராஜா, விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார், குறித்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

தமிழினத்தின் விடுதலைக்காக இடம்பெற்ற போராட்டத்தில், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கானவர்கள் அழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதற்கான ஒரு சாட்சியாகவே கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியைப் பார்க்கமுடிகின்றது.

இவ்வாறு எமது தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதற்கான ஒரு சாட்சியம் கண்டுபிடிக்கப்பட்டமையால் அகழ்வாய்வுகள் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன. எலும்புக்கூடுகள், ஆடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை சாட்சியங்களாகப் பெறப்படுகின்றன.

ad

ad