புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2023

திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கைது

www.pungudutivuswiss.com


திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில்  பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில், பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில், பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    

சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பின்னர் வாகனத் தொடரணி தம்பலகாமம் நோக்கி திரும்பிச் சென்றதுடன் செல்வராசா கஜேந்திரன் எம்.பி, தொலைபேசி ஊடாக, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்தார்.

அதன் பின்னர் திருகோணமலை பொலிஸ் குழுவொன்று தம்பலகாமத்துக்கு வந்து செல்வராசா கஜேந்திரன் எம்.பியிடம் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் விசாரணையை சீனன்குடா பொலிஸாரிடம் ஒப்படைத்தது.

இவ்வாறு சீனன்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் திருகோணமலை விஜேசேகரபுரவை வசிப்பிடமாகவும் மற்றையவர் சர்தாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.

திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் மனையாவெளி மற்றும் சுமேதங்கரபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

ad

ad