புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2023

யாழ்ப்பாணத்தில் புலனாய்வு அதிகாரியுடன் இருந்தவர் மீது வாள்வெட்டு! [Saturday 2023-09-16 07:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 
கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவரும் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஒருவரும் என பொலிஸார் தெரிவித்தனர் . சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சம்பவ நேரத்தில் தாக்குதலுக்கு இலக்கானவருடன் பொலிஸ் உயர் அதிகாரிக்கு கீழ் கடமையாற்றும் பொலிஸ் புலனாய்வைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உடனிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

அது தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

ad

ad