புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2019

பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் - இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு

கேட்டார்ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

நவம்பர் 15 அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலைக் குடித்து விட்டு அன்னம் தமிழர்களை கைவிட்டு விடும்!- சிவாஜிலிங்கம

தமிழரசு கட்சி, ஐந்து கட்சிகள் மற்றம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்ல தமிழ் மக்களிற்கும் பச்சைத் துரோகத்தினை செய்துள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரெலோ, புளொட் நாளை முடிவு அறிவிப்பு! - ரணிலுடன் பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை தமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை தமது முடிவை

யார் வென்றாலும் ஜெனிவாவில் நெருக்கடி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும், இலங்கை விவகாரம், அடுத்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நெருக்கடியாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை

ஜனாதிபதி தேர்தல் -முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தனிடம்

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ள அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தி
கூட்டமைப்பினர்  மீது செருப்பு வீச்சு என்ற  பொய் பிரசார  அலை
வவுனியாவில்  நடைபெற்ற  தமிழரசுக்கட்சி கூடத்தின் முடிவில்  உறுப்பினர்கலள்  மீது  செருப்பு  வீசப்படடதாகவும் செருப்பால் அவர்களை  அடித்ததாகவும்  பல இணையங்கள் உண்மைக்கு புறம்பான  போய்  செய்திகளை கடடடவிழ்த்து விட்டுள்ளதாக  விமர்சகர்கள் குமுறுகிறார்கள் காணாமல் போனோர்  சங்க  பெண்  ஒருவர்  செருப்புடன்  நிற்கும் படத்தி னை  போட்டு   பல விசமத்தனமான கற்பனை  கதைகளை கட்டி  செய்தி  இட்டு இணையங்கள்  பரபரப்பை  உண்டுபண்ணுவதாகவும் வெளியே   ஆர்ப்பாடுடம் செயதோர்  பொலிஸாரினால் தடுக்கப்பட்டு இருந்ததே  உண்மை எனவும் செய்திகள் கூறுகின்றன .சுதந்திர நாடொன்றில் எங்கும் யாருக்கு  முன்பாகவும் இது üபோன்ற ஆர்ப்பாட்ட்ங்களை  செய்ய முடியுமெனவும்  வெறுமனே    வெளியே  இப்படி   குவிந்து நின்ற பின்னர்  படங்களை  எடுத்து   எதோ பாரிய  அசம்பாவிதம் நடந்தது போல  பொ ய் பிரசாரங்களில் ஈடுபடுவது இயல்பு என்றும்   கூறப்படுகிறது உண்மையில்  எந்த உறுப்பினர் மீதும் செருப்பு  வீசப்படவோ  அல்லது செருப்பினால்  தாக்கப்படவோ  இல்லை என்பதே  உண்மை 

இறுதி முடிவு எப்போது? சுமந்திரன் விளக்கம்


ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ad

ad