புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2013

வட மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டி: முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டுபேசும் போதே இவ்வறிவிப்பை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவம் பாதுகாக்கப்படும். அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதும் வேட்பாளர்களை தெரிவு செய்வதும் கட்சியின் தனித்துவம் என அவர் தெரிவித்தார்.
எனினும் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பாடலாம் எனவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், வட மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

ad

ad