இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்கள் நாவுறு தீவுகளுக்கு மாற்றம்
இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் அவுஸ்திரேலியாவின் நாவுறு தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நாவுறு தீவுகளுக்கு அனுப்பபட்டுள்ளனர்.
இலங்கையர்களுடன் வியட்நாம், லெபனான் நாட்டவர்களும் உள்ளடங்கியிருந்தனர்.
இவர்கள் நாவுறு தீவுகளுக்கு மாற்றப்பட்டதன் மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருவோருக்கு கடுமையாக எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.