யாழிற்கு பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் விஜயம்
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகம்மத் சுபியுர் ரஹ்மான் (Mohammad Sufiur Rahman) இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
வடமாகாண ஆளுனர் சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
குறிப்பாக யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் கூடுதல் விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
இதற்கிடயே எதிர்பாராதவிதமாக ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில முயற்சி அபிவிருத்தி டக்ளஸ் தேவானந்தாவும் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடலொன்றை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.