புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2013

நில மோசடி புகார்! சோனியா காந்தி மருமகன் மீது விசாரணை கமிஷன் அமைக்க பா.ஜ.க. எம்.பி.க்கள் கடிதம்!
காங்கிரஸ் அரசு நடைபெறும் மாநிலங்களில் எல்லாம் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா குறைந்த விலைக்கு ஏராளமான நிலங்களை வாங்கி குவித்ததாகவும், பிறகு இந்த நிலங்கள் அதிக விலைக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், 
ராபர்ட் வதேரா இதற்காக பணம் எதையும் செலவு செய்யவில்லை. ரியல் எஸ்டேட் நிறுவனங்களே முன்பணம் கொடுத்துள்ளன என்றும், குறிப்பாக ராஜஸ்தானிலும், அரியானாவிலும், டெல்லியிலும் இத்தகைய பரிவர்த்தனைகள்
அதிகளவில் நடைபெற்றன எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தபோதும், டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தபோதும், இந்தகைய முறைகேடுகள் பெருமளவில் நடைபெற்றதாக புகார் எழுந்தது. 
அரியானாவில் புபேந்தர் சிங் ஹுடா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இப்போது நடந்து வருகிறது. ராபர்ட் வதேராவின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க முற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.
ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாஜக அரசு பதவியேற்றுள்ளது. இந்தநிலையில் பிகானீர் உள்ளிட்ட இடங்களில் ஆயிரம் ஏக்கர் அளவுக்கு ராபர்ட் வதேராவும், அவரது நிறுவனங்களும் நிலங்களை வாங்கி குவித்துள்ளதாக  பாஜக செய்தித்தொடர்பாளர் கிரித் சோமைûயா சில விவரங்களை வெளியிட்டுள்ளார். 
இந்தநிலையில் பாஜக எம்பிக்கள் ரவிசங்கர் பிரசாத், அர்ஜுன்மெக்வல், ஜே.பி.நட்டா, புபேந்தர் யாதவ், ராஜேந்திரஅகர்வால் ஆகியோர் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேசிந்தியாவுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ராபர்ட் வதேராவின் நில மோசடிகளை துல்லியமாக விசாரிக்கவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், ராபர்ட் வதேரா விவகாரம் குறித்து விசாரிக்க உடடினயாக விசாரணை கமிஷனை அமைக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ad

ad