புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2013

ஆம் ஆத்மி கட்சிக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்காது: காங்கிரஸ் எச்சரிக்கை
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 32 இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. 28 இடங்களையும் கைப்பற்றிய ஆம் ஆத்மி
கட்சி, கவர்னர் விடுத்த அழைப்பை ஏற்று 10 நாட்கள் அவகாசம் கேட்டு உள்ளது. 

இதையடுத்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி கருத்து கேட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு அளிக்கும் ஆதரவு நிபந்தனையைற்றது கிடையாது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கிரண் வாலியா தெரிவித்தார். மேலும், நாங்கள் உங்கள் அரசை கவிழ்க்க மாட்டோம் என்றுதான் தெரிவித்துள்ளோம். ஆனால் எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்காது. உங்கள் செயல்பாடு திருபதி அளிக்கவில்லை என்றால் மறுபரீசிலனை செய்வோம் என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சாஷியா லிமி, காங்கிரஸ் உண்மையான நிறம் வெளிப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார்.

ad

ad