புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2014



தேசிய விரைவு நெடுங்சாலையின் நிர்மானப் பணிகள் தொடர்பாக பேச்சுக்கள் நடைபெறுகின்றன

srilanka highwayவடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்பட்ட நிர்மானப் பணிகள் தொடர்பாக சீன நிறுவனத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்காவின் நெடுங்சாலைகள், துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சின் செயலர் ரஞ்சித் பிறேமசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான தேசிய விரைவு
நெடுங்சாலையின் முதற்கட்டம், கொழும்பின் வெளிப்புறத்தில் உள்ள எந்தரமுல்லை வெளியக முனையத்தில் இருந்து கம்பகா, வியாங்கொட மீரிகம, குருநாகல வழியாக தம்புள்ள வரை அமையவுள்ளது.
முதலில் நான்கு வழிச் சாலை கொண்டதாக அமைக்கப்படும் இந்த விரைவு நெடுஞ்சாலை பின்னர், ஆறு வழிப்பாதை கொண்டதாக விரிவாக்கப்படும்.
இந்த விரைவு நெடுஞ்சாலையில் தம்புள்ளையில் திருகோணமலை நோக்கியதாக ஒரு கிளை அமைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad