புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2014

மீண்டும் துணைவேந்தரானார் செல்வி வசந்தி அரசரட்ணம்
news
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மீண்டும் வசந்தி அரசரட்ணமே உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் 2014.03.8ம் திகதி நடைபெற்றது.

அதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும்,
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி குணசீலன் 16 வாக்குகளையும், யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் விக்னேஷ்வரன் 13 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இவ்வாறு போட்டியிட்டவர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்ற மூவரின் பெயர்களை பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கும்.

மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்தது இதில் மீண்டும் வசந்தி அரசரட்ணத்தையே ஜனாதிபதி இன்றைய தினம் தெரிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ்த் தேசியம் தொடர்பான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் மறைமுக தடைகளை ஏற்படுத்தியதோடு. கடந்த வருடம் மாவீரர் நாளை மாணவர்கள் அனுஸ்டிக்க முடியாத வகையில் நீண்ட விடுமுறையை அளித்தவர் என்று துணைவேந்தர் மீது மாணவர்கள் அதிப்தி கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad