புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

கே.பிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்: அமைச்சர் ராஜித சேனாரத்ன


ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மோசடி செய்த எவரேனும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருப்பார்களாயின், இனியும் செல்வார்களாயின் அவர்களைக் கைது செய்வது ஒன்றும் கடினமான விடயமல்ல.
சர்வதேச பொலிஸாருக்கு அறிவித்த பின்னர், அவர்கள், அத்தகைய மோசடிக்காரர்களை கைது செய்து நாட்டுக்கு அனுப்பிவைப்பார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கே.பிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர் பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்றும், பத்துக்கு மேற்பட்ட பெயர்களில் நடமாடியுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என்றார்.

ad

ad