புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

வடமாகாணத்தை கூட உலுப்பும் எயிட்ஸ் பற்றி ஓர் ஆய்வு


எயிட்ஸ் – தப்பிப்போமா நாம்..!
essayஇன்று எம்மைப் பாதிக்கின்ற தொற்றுநோய்களில் பிரதானமானதொன்றாக எயிட்ஸ் நோய் காணப்படுகின்றது. இந்த எயிட்ஸ் நோயானது அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றதையும் காணமுடிகின்றது.
 
அதிலும் இனங்காணப்பட்ட நோயாளிகள் எச்.ஐ.வி கிருமித் தொற்றினை உள்ளுரிலேயே பெற்றவர்களாகக் காணப்படுவது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமையேயாகும். எனவே எமது சமுதாயம் இந்த நோயிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமாயின் எயிட்ஸ் நோய் தொடர்பான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
 
எயிட்ஸ் நோய் என்றால் என்ன..?
 
எயிட்ஸ் என்பது எச்.ஐ.வி எனும் ஒருவகை வைரஸ் கிருமியினால் ஏற்படும் நோயாகும். எச்.ஐ.வி கிருமியால் பொதுவான சூழலில் உயிர்வாழ முடியாது. எச்.ஐ.வி கிருமி உயிர்வாழ்வதற்கு உயிர்க்கலங்கள் தேவை.எனவே வளியிலோஇநீரிலோஇஉணவுகளிலோஇசூழலிலோ இந்த எச்.ஐ.வி கிருமி காணப்படமாட்டாது.தொற்றடைந்த ஒருவரின் உடலினுள் மாத்திரமே உயிர்வாழும்.
 
இந்த எச்.ஐ.வி கிருமியானது மனிதனது நோயெதிர்ப்புச் செயற்பாட்டிற்குப் பொறுப்பாகவுள்ள நிணநீர்த் தொகுதியினைத் தாக்கி நோயெதிர்ப்புச் சக்தியினை அழித்து ஏனைய தொற்று நோய்களை உண்டாக்குகின்றது. உடலானது தொற்றுநோய்க் கிருமிகளை எதிர்க்க முடியாதிருக்கும். இதனால் எயிட்ஸ் என்பது பெற்ற நீர்ப்பீடணக் குறைபாட்டுச் சிக்கல் (யுஊஞருஐசுநுனு ஐஆஆருNழு 
னுநுகுஐஊஐநுNஊலு ளுலுNனுசுழுஆநு) எனப் பொருள்படும்.
 
எயிட்ஸ் நோயின் குணங்குறிகள்...........
 
 
-உடல் நிறை குறைவடைதல் - ஒரு மாத காலத்துள் உடல் நிறை 10மூ வரை குறைவடைதல்.
 
-ஒரு மாத காலத்துக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல்.
 
-ஒரு மாத காலத்துக்கு மேல் நீடிக்கும் வயிற்றோட்டம்.
 
எயிட்ஸ் நோயின் ஏனைய சிறு அறிகுறிகள்
 
-களைப்பு
 
-இருமல்
 
-கை கால் வலி
 
-அதிகம் வியர்த்தல்
 
-பல்வேறு சரும நோய்கள்
 
-வாயினுள் பொருக்கு உருவாதல்
 
தொற்றுக்கு ஆளானவரின் நீர்ப்பீடணத் தொகுதி இந்தக் காலப்பகுதியினுள் பெருமளவுக்கு அழிக்கப்பட்டுவிடுவதால் அவர் பல்வேறு தொற்றுகளுக்கு ஆளாவார்.வைரசுத் தொற்றுஇ  பக்ரீரியாத் தொற்றுஇ  பங்கசுத் தொற்று போன்ற தொற்றுக்கள் இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடும். பொதுவாக  ஆரோக்கியமான ஒருவரில் நோய்நிலைமைகளை ஏற்படுத்தாத மிக நலிவான நோய்க்கிருமிகள் கூட எயிட்ஸ் நோயாளிகளைப் பொறுத்தமட்டில் மரணத்தை ஏற்படுத்தக் கூடும்.
 
எயிட்ஸ் நோயின் நோயரும்பு காலம்.........
 
 எச்.ஐ.வி  கிருமி தொற்றி எயிட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் தோன்ற பல வருடங்கள் எடுக்கும். இது வளர்ந்தவர்களில் 8 தொடக்கம் 12 வருடங்களாகவும்இ சிறியவர்களில் 2 தொடக்கம் 5 வருடங்களாகவும் இருக்கும்.
 
ஏயிட்ஸ் தொற்றும் வழிகள் எவை................
 
(1)பாலியல் தொடர்புகள் மூலம்
தொற்றடைந்தோரின் பாலுறுப்புச் சுரப்புக்களில் வைரஸ் பெருமளவில் அடங்கியிருக்கும்.எனவே பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகள் மூலமே அதிகளவில் தொற்று ஏற்படுகின்றது. எச்.ஐ.வி தொற்றின் ஏறத்தாழ 80மூ வீதமானவை பாலியல் தொடர்புகள் மூலமாகவே ஏற்படுகின்றன.
 
 -யோனிமடல் உடலுறவு.
 
 -குதவழி உடலுறவு.
 
 -வாய்வழி உடலுறவு.
 
 என்பன இந்த நோய் பரவும் வழிகளாகும்.
 
(2) குருதி மூலம் 
 
தொற்றடைந்த குருதியைப் பாய்ச்சுவதாலும்இ தொற்றடைந்த குருதியினால் மாசடைந்த மருந்தேற்றும் ஊசிஇஅசவர அலகு மற்றும் உபகரணங்கள் கிருமியளிக்காது மீளப்டிபயன்படுத்துவதாலும் வைரஸ் தொற்று ஏற்படும். மேலும் தொற்றடைந்த ஒருவரின் உடலுறுப்புக்களையோ இழையங்களையோ பிரிதொருவன் உடலில் பொருத்துவதாலும் வைரஸ் தொற்று ஏற்படும்.
 
 (3) எச்.ஐ.வி கிருமி தொற்றடைந்த தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி கிருமி தொற்றடைந்த பெண்கள் கருத்தரிப்பதால் குழந்தைக்கும் வைரஸ் தொற்று ஏற்படலாம்.
 
-கருவில் இருக்கும் போது.
 
-பிரசவத்தின் போது.
 
-தாய்ப்பால் ஊட்டும் போது.
 
 (4) போதைப் பொருள் பாவனையாளர்களிடையே போதைப்பொருள்களை நாளத்தினூடாக பரிமாறும்போது எச்.ஐ.வி கிருமித் தொற்று ஏற்படலாம்.
 
யிட்ஸ் தொற்றாத வழிகள் எவை................
 
பின்வரும் வழிகளில் எச்.ஐ.வி கிருமி கடத்தப்படுவதில்லை
 
1.தொற்றடைந்த ஒருவரை தொடுவதால் அவருடன் கைகுலுக்குவதால் 
 
2.தொற்றடைந்தவருடன் ஒன்றாக வாழ்வதால்
 
3.தொற்றடைந்தவருடன் விளையாடுவதால்
 
4.தொற்றடைந்தவர் நீராடிய நீச்சல்தடாகத்திலே ஆற்றிலோ நீராடுவதால்ஃ நீந்துவதால்
 
5.தொற்றடைந்தவரை கட்டித் தழுவுதல்
 
6.தொற்றடைந்தவர் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள்இ பாவனைப் பொருள்களைப் பயன்படுத்தல்
 
7.நுளம்பு  மூட்டைப்பூச்சி மற்றும் ஏனைய பூச்சிகள் தீண்டுவதால்
 
8.தும்மல்இ  இருமல்
 
9.தொற்றடைந்தோர் பயன்படுத்திய உடை இ துவாய் போன்றவற்றைப் பயன்படுத்துவதால்
 
10.தொற்றடைந்தோர் பயன்படுத்திய மலகூட ஆசனத்தை பயன்படுத்துவதால்
 
எயிட்ஸ் நோய்க்கான சிகிச்சை பெறுமிடம்.....
 
எயிட்ஸ் நோய்க்கான சிகிச்சையையும்இஆலோசனையையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறை இலக்கம் 33 இல் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த அறை இலக்கம் 33 இற்கு செல்லவேண்டுமாயின் வெளிநோயாளர் பிரிவிற்கு செல்லத் தேவையில்லை.நேரடியாகவே அறை இலக்கம் 33 இற்கு செல்லலாம்.
 
இந்த அறை இலக்கம் 33 இல் பெயரில்லாமல் பதிவெண்ணுடன் மட்டுமே இரத்தம் எடுக்கப்பட்டுப் பரிசோதனை செய்யப்படும். இங்கு முற்றிலும் இரகசியத் தன்மை பேணப்படும். எயிட்ஸ் தொற்றத்தக்க ஆபத்தைப் பெருமளவுக்குக் கொண்டுள்ளோர்  யாரும் எச்.ஐ.வி கிருமித் தொற்றுக்கு உள்ளாக இடமுண்டு. இனம்இ மதம்இ  செல்வநிலைஇ சமூக அந்தஸ்து போன்ற எதுவும் இதற்கு விதிவிலக்கானதல்ல.தனிநபர்களின் ஆரோக்கிய நிலைமையும் கூட எச்.ஐ.வி கிருமித் தொற்றில் ஆதிக்கம் செலுத்துவதில்லை.எந்த ஒருவரதும் பாலியல் நடத்தையே எச்.ஐ.வி கிருமித் தொற்றை ஏற்படுத்தும் பிரதானமான காரணியாகக் கொள்ளப்படுகின்றது.
 
1.வர்த்தக ரீதியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆண்களும் 
பெண்களும்.
 
2.ஒன்றுக்கு மேற்பட்டோருடன் பாலியல் தொடர்புகளை வைத்திருப்போர்.
 
3.தன்னின உடலுறவில் ஈடுபடுவோர்.
 
4.பாலுறுப்புக்களில் புண்கள், தொப்பளங்கள், காயங்கள் உடையோர்.
 
5.பாலியல் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் ஏனைய நோய்களுக்கு ஆளாகியுள்ளோர்.
 
6.போதைப் பொருள்களை நாளத்தினூடாகப் பகிர்ந்து பரிமாறுபவர்கள். இதனால் எச்.ஐ.வி கிருமித்  தொற்றுக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் மிகவும் அதிகமுண்டு.
 
எயிட்ஸ் எனப்படும் பாலியல் சார்ந்த நோயானது ஒரு நடத்ததை சார்ந்த சுகாதாரப் பிரச்சினையாகவே காணப்படுகின்றது. ஒருவரின் உகந்ததற்ற நடத்தைகளே இந்த நோய் ஏற்படக் காரணமாக அமைகின்றன. எனவே நாம் ஒவ்வொருவரும் எய்ட்ஸ் பற்றிய பூரண தெளிவுடன் வாழத் தொடங்கினால் நம் மண்ணிலிருந்து இந்தக் கொடிய நோயை அகற்றிவிடலாம்.

ad

ad