குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி (படங்கள் )மிச்செல்லுடன் அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஏர்போர்ஸ்–1’ விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி வந்தார். இந்திய நேரப்படி நேற்று மாலை அவர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார்.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், அவரை மத்திய அமைச்சர்கள் குழு வரவேற்றது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்துகிறார். டெல்லியில் திங்கள்கிழமை நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஒபாமா வருகையையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், அவரை மத்திய அமைச்சர்கள் குழு வரவேற்றது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அவர் அஞ்சலி செலுத்துகிறார். டெல்லியில் திங்கள்கிழமை நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
ஒபாமா வருகையையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.