புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2015

நாட்டில் இருந்து வெளியேறியுள்ள ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படவில்லை


இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இன்னும் அழைக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் பல அமைச்சர்களும் வெளியேறிச்சென்ற ஊடகவியலாளர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
எனினும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இன்னும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றையும் விடுவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் காலத்தில் அச்சம் காரணமாக பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றனர்.
புலி ஆதரவாளர்கள் என்றும் துரோகிகள் என்றும் கூறப்பட்ட நிலையிலேயே அவர்கள் நாட்டில் இருந்து வெளியேறினர்.
இவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கோவைகளும் திறக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad