புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2015

ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிந்த 1011 ஊழியர்களை நீக்கிய மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் பல பதவிகளில் அமர்த்தப்பட்ட ஆயிரத்து பதினொரு பேர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முந்தைய அரசாங்கம் இவர்களுக்கு வீணாக சம்பளத்தையும் சிறப்புரிமைகளையும் வழங்கி பதவிகளில் வைத்திருந்தது.
அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 565 ஆக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், ஆயிரத்து 11 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.
அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டிருந்த இவர்களுக்கு சம்பளம், எரிபொருள், வாகனம், தொலைபேசி போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டதன் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் அதிகரித்திருந்தன.
இதனால், ஜனாதிபதி தனது ஊழியர்களின் எண்ணிக்கை 554 ஆக குறைந்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் செலவுகளும் பெருமளவில் குறைந்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் கூறினார்.

ad

ad