இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதேபோல், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் அவசியம். அதன் மூலம் நாட்டில் அதிக தொழிற்சாலைகள் உருவாகும். நாட்டு மக்கள் மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அதிக அக்கறையும், நலனும் கொண்டுள்ளார். அதனால்தான் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் ஆதாயத்துக்காக ஆதரவு தந்ததாக தமிழ்நாட்டின் பெரிய தலைவரான தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். கருணாநிதி இதுவரை எவ்வளவோ மசோதாக்களை ஆதரித்து இருக்கிறார். அந்த மசோதாக்களையெல்லாம், ஆதாயம் எதிர்பார்த்துதான் அவர் ஆதரித்தாரா?
மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு மோடி அரசு சாதகமாக இருக்கிறது. மேலும், விவசாயத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மோடி அரசு செய்யும்.
நாட்டில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு மட்டும் பொறுப்பல்ல. சட்டம்–ஒழுங்கை மாநில அரசுதான் காப்பாற்ற வேண்டும். சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்'' என்றார்.