புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2015

சம்பூரில் 1052 ஏக்கர் விடுவிக்க நடவடிக்கை ; மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளிப்பு


கிழக்கு மாகாணம் சம்பூரில் 1052 ஏக்கர் காணி ஏப்ரல் மாதம் இறுதிக்குள் உரியவர்களிடம் கையளிக்கப்படும்  என மீள்குடியேற்ற அமைச்சர்
டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
 
 
சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
கடந்த 9 வருடங்களாக சம்பூர் மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.அதற்கு நல்லதொரு தீர்வு இப்பொழுது கிடைத்துள்ளது. 
 
சம்பூர் குடியேற்றம் சம்பந்தமாக நல்லதொரு தீர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தற்பொழுது வழங்கியுள்ளனர். 
 
அமைச்சரவையும் சம்பூர் மக்கள் உடனடியாக மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்றே அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 
 
அதற்கமைவாக இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று முதலீட்டு வலயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 818 ஏக்கர் காணியையும் -உடனடியாக உரிய சம்பூர் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்தல். 
 
இரண்டாவதாக கடந்த 9 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக கடற்படையினரால் பயன் படுத்தப்பட்டு வந்த சுமார் 234 ஏக்கர் நிலத்தையும் விடுவித்தல். 
 
அத்துடன் மீளக்குடியேற்றப்பட உள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் தொண்டர் நிறுவனங்களின் உதவிகளை பெற பேச்சு நடத்தி வருகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
 
இதன்போது கிழக்கு முதலமைச்சர் அல்ஹாஜ் ஹாபீஸ் நசீர், கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான கே.நா

ad

ad