கொழும்பில் நடைபெற்ற தேர்தல்கள் திணைக்களத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்
இரா.சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இந்த உரை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஆனந்த சங்கரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தேர்தல் ஆணையாளரிட மிருந்து 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் திணைக்களத்தின் 60 ஆம் ஆண்டு பூர்த்தி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நீண்ட தூரம் பிரயாணம் செய்து அதில் கலந்து கொண்டுள்ளேன்.
என்னுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் பாராளு மன்றத்திலும் முன்பு அங்கத்துவம் வகித்த இன்றைய எதிர்க்கட்சித் தலை வர் ஆர். சம்பந்தன் அவர்களுடைய உரையை கேட்பதும் எனது நோக்க மாகும். அவருடைய உரையையொட்டி என்னுடைய சில கருத்துக்கள் வெளி யிடுவதற்கு என்னை மன்னிக்கலாம்.
நான் கூறுவது பொருத்தமற்றதென்றும் கூற முடியாது. ஏனெனில் உண்மைகள் திரிபுபடுத்தப்படக்கூடாது. அப்படி நாம் செய்தால் அது திருப்பி வந்து எம்மையே தாக்கும்.
“இலங்கையில் ஜனநாயகம் உயிர் வாழாவிடின் நாடு அழிந்துவிடும். இந்த நாடு அழிந்து போவதற்கு எவரும் தயாரில்லை. ஆதலால் ஜனநாய கத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும் சகல தருணத்திலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தனது பொறுப் புணர்வு குறித்துத் தேர்தல் திணைக் களம் அறிந்திருப்பது அவசியம்” இவ்வாறு அவர் கூறியது என்னை சிரிக்க வைத்தது.
திடகாத்திரமானதாக கூறுவது என்னவெனில் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அவர் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களையும், பலகோடி பெறுமதிமிக்க தனியார், பொதுச் சொத்துக்களையும் இழந்திருக்க நேர்ந்திருக்காது. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகள் தத்தம் கணவருடன் மேலும் பல குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பர்.
பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக இருப்பதை தவிர்த் திருப்பார்கள். நாட்டின் எப்பகுதியிலும் ஒருவரேனும் பட்டினியால் உயிரிழந் திருக்கமாட்டார்கள். நான் கிளிநொச்சியில் வாழ்ந்த காலத்தில் வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டும் ஒரே நபர் தனது ஒரு ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு என்னிடம் வருவார். தம்பி பிரபாகரன் கூட முதலமைச்சராக வந்திருக்கலாம்.
2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற போதுத் தேர்தலின் போது நாடு தழுவியளவில் என்றும் எதிர் நோக்காத வகையில் படுமோசமான அரசியல் அனர்த்தம் ஏற்பட்டது. வட கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகம் முற்றுமுழுவதாக தடம் புரண்டமைக்கு திருவாளர்கள் சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் பொறுப்பேற்க வேண்டும்.
அரச ஊழியர்களின் கட மையை விடுதலைப் புலிகள் பொறுப்பேற்றனர். தேர்தலில் போட்டி யிட்ட 22 பேரும் 95 வீத வாக்குகளை பெற்று பெரும் சாதனையை நிலை நாட்டினர்.
இந்த வெற்றி, வெற்றி பெற்றவர்களின் சம்மதத்தோடு அவர்கள் மீதி திணிக் கப்பட்டமையால் மறுநாளே ஒட்டு மொத்தமாக தங்கள் பதவியை அவர்கள் துறந்திருக்க வேண்டும்.
ஆனால் பதவிக்குரிய சகல செளபாக்கியங் களையும் அனுபவித்துக் கொண்டு எதுவித தடையுமின்றி ஆறு ஆண்டுகள் தொடர்ந்து மிக்க வசதியாக 22 பேரும் தத்தம் ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர். தேர்தல் முறைகேடுகளை ஆட்சேபித்து இவர்களின் தேர்தலை தள்ளுபடி செய்து புதிய தேர்தலை நடத்துமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆணையாளரிடம் விட்ட கோரிக்கை சட்டத்தில் அதற்கு இடமில்லையென கூறி நிராகரிக்கப் பட்டது.
இதற்கு நிவாரணம் தேடக்கூடிய வகையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய அரசு அதனைச் செய்ய வில்லை. அவ்வாறு தெரிவு செய் யப்பட்டவர்கள் ஒன்றில் நீக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திலி ருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். தாமாக அவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய சொல்லவுமில்லை.
அவர்கள் மீது சட்ட நடவடிக்கையாரும் எடுக்கவுமில்லை. அதற்குப் பதிலாக ஏறக்குறைய சபையின் 10 வீத உறுப்பினர் களாகிய 22 பேரும் எவ்வித இடை யூறுமின்றி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பதவியில் நீடித்தனர். இதே நபர்கள் இதே சட்ட ரீதியான குறைப்பாட்டுடன் அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு 14 பேர் 10 வீத வாக்குகளை மட்டும் பெற்று வெற்றியீட்டினர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி இத் தேர்தலில் சாதாரணமாக தோற்க வில்லை. அகிம்சைக்கு கட்டுப்பட்ட மிதவாத கட்சியினராகிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஒரு காலத்தில் 18 பேரை பாராளுமன்றத்தில் உறுப்பின ராக கொண்டிருந்தவர்கள், திட்டமிட்டு நிரந்தரமாக சட்டத்துக்கு விரோதமாக நீக்கப்பட்டார்கள். அவர்களை மீளவைக்க அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிbழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன இணைந்த கூட்டு முயற்சியே 22.10.2001 ஆம் ஆண்டு உருவாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். என்னையே முதல் தலைவராகக் கொண்ட அமைப்பே இது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அதன் அன்றைய செயலாளர் நாயகம் இரா.சம்பந்தனும் ஏனைய மூன்று கட்சியின் செயலாளர்களும் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக் கையில் கைச்சாத்திட்டனர்.
2001 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பிலும் அதன் சின்னமாகிய “உதயசூரியன்” சின்னத்தில் போட்டியிட்டு 14 ஸ்தா னங்களை கைப்பற்றியது.
அத்தேர்தலில் பல்வேறு கட்சிகளாலும் தெரிவாகிய ஒன்பது உறுப்பினர்களில் நானே 36,000 இற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவதாக தெரிவானேன். 2004 ஆம் ஆண்டு முற்பகுதியில் கெளரவ இரா.சம்பந்தன் தலைமையில் ஒரு பிளவு ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட நபரின் வற்புறுத்த லால் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் என்றும், அவர்களே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனவும் ஏற்றுக்கொண்டு 2004 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தி லும் பிரகடனப்படுத்தியிருந்தனர். அதேபோன்று அவர்களின் வற்புறுத்த லுக்கு இணங்க இலங்கை தமிழரசுக் கட்சியை அதன் ஸ்தாபகர் சா.ஜே.வே. செல்வநாயகம் இறந்து 26 ஆண்டுகளின் பின் புதுப்பிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தெரிவிக்காது இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் இடத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிடித்துக் கொண்டது.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 12 பேரில் த.தே.கூ.க்கு ஆறு இடங்களை மாத்திரம் கொடுத்து எஞ்சிய ஆறு இடங்களையும் தமிழ்ச் செல்வன் அவர்கள் தம் இஸ்டம்போல் வழங்கியிருந்தார்.
த.தே.கூ. பாராளுமன்றம் செல்வதற்கு விடுதலைப் புலிகளை தாராளமாக உபயோகித்துவிட்டு அவர்கள் மீதும் போர் குற்ற விசாரணைகளை நடத்தும்படி கேட்டுக்கொண்டமை அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியை பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் பலாத்காரமாகவே ஆட்களை திரட்டினர்.