பழம்பெரும் நடிகையான மனோரமா நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார். தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில்
இந்நிலையில், சிறுதாவூரில் இருந்து இன்று பிற்பகலில் சென்னை வந்த முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் தி.நகர் சென்றார். அங்கு மனோரமாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது மூத்த சகோதரி மனோரமா, இயற்கை எய்திவிட்டார் என்று அறிந்ததும், எனக்கு ஏற்பட்ட துக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. திரைப்படத் துறையில் அவர் எனது மூத்த சகோதரி ஆவார். ஏராளமான திரைப்படங்களில் அவரும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம்.
மனோரமாவைப் போல், ஒரு சாதனையாளர் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்பு எவரும் இருந்ததில்லை. இனி எவரும் பிறக்கப்போவதும் இல்லை. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இனி எந்தக் காலத்திலும் யாராலும் நிரப்ப முடியாது. அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் களைப்பாற வேண்டும். அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.