வீதியில் கத்தி கொண்டு செல்வதாக இருந்தால் சட்ட அனுமதி பெறவேண்டுமா என்று யாழ்ப்பாண மக்களிடையே குழப்பம் எழுந்துள்ளது. சாவகச்சேரியில் கத்தியைக் கொண்டு சென்ற ஒருவருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் அவருக்கு 50 ரூபா தண்டம் விதித்தது. பருத்தித்துறை நீதிமன்றிலும் இப்படியானதொரு வழக்கில் 150 ரூபா தண்டம் சிலமாதங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டது. இவை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீதியில் கத்தி கொண்டு செல்வதாக இருந்தால் சட்ட அனுமதி பெறவேண்டுமா என்று யாழ்ப்பாண மக்களிடையே குழப்பம் எழுந்துள்ளது. சாவகச்சேரியில் கத்தியைக் கொண்டு சென்ற ஒருவருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் அவருக்கு 50 ரூபா தண்டம் விதித்தது. பருத்தித்துறை நீதிமன்றிலும் இப்படியானதொரு வழக்கில் 150 ரூபா தண்டம் சிலமாதங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டது. இவை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாவகச்சேரிச் சம்பவத்தில்‘தடை செய்யப்பட்ட கத்தியை வைத்திருந்தார்’ என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸார் வழக்குத் தொடுத்திருந்தனர். “சுமார் ஒன்றரை அடி நீளத்துக்கு மேற்பட்டதும் ஒன்றே முக்கால் இஞ்சி அகலத்துக்கு மேற்பட்டதுமான கத்தியையும், இரண்டு பக்கத்தாலும் வெட்டக்கூடியதுமான கத்தியையும் தடை செய்யப்பட்ட கத்தி என்று சட்ட ஏற்பாடுகளின்படி வகைப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்”- என்கின்றனர் பொலிஸார்.
“அதற்கும் அப்பால் அவற்றைக் கொண்டு செல்லும் நோக்கமே பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது. கத்தியை என்ன காரணத்துக்காக என்ன நோக்கத்துக்காகக் கொண்டு செல்லப்படுகிறது என்பதைப் பொறுத்தே பொலிஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர். பொலிஸார் சிலர் வேண்டுமென்று அத்தகைய குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தொடுக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. தவறான நோக்கம் இல்லாவிட்டால் பிரச்சினையில்லை. சந்தேகிக்கும் வகையில் எவராவது கத்தி கொண்டு சென்றால் வழக்குப் பதிவு செய்யப்படுகின்றது.”- என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
“தடை செய்யப்பட்ட கத்தி” என்பதான சட்ட ஏற்பாடுகள் எவையும் இல்லை என்று சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.அப்படியானால் தேவை கருதி கத்தியைக் கொண்டு செல்ல முடியாதா?. அப்படிக் கொண்டு செல்வதாக இருந்தால் சட்டஅனுமதி பெறவேண்டுமா?. மீளக் குடியமரும் இடங்களைச் சேர்ந்த மக்களுக்கு கத்தி, கோடரி, மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் அவற்றைத் வீதியில் கொண்டு செல்லவதாக இருந்தாலும் சட்ட அனுமதி பெறவேண்டுமா?.
அவர்கள் மட்டுமல்ல, சீவல் தொழில் செய்பவர்கள், கூலிக்குக் கதியால் வெட்டச் செல்பவர்கள் ஏன் வீடுகளில் வளர்க்கும் ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்குக் குழை வெட்டச் செல்பவர்கள்கூட கத்தியைக் கொண்டு செல்வார்கள். அவர்கள் என்ன செய்வது? என்று குழப்பத்துடன் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.