வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 2000 - 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.