புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2020

இந்தியா, சீனாவுக்கு பிரித்தானிய பிரதமர் வேண்டுகோள்

Jaffna Editor
எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில், இந்தியா-சீனா இடையிலான மோதலால் பிரித்தானிய நலனுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பழமைவாத கட்சி உறுப்பினர் பிலிக் டிரம்மண்ட் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-

லடாக்கில் உள்ள சூழ்நிலை மிகவும் தீவிரமான, கவலைக்குரிய அம்சமாகும். இதை பிரித்தானியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்

ad

ad