புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2020

சித்தன்கேணி மூதாளர் வீட்டுக் கொள்ளை தொடர்பில் ஒருவர் கைது

Jaffna Editor
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தன்கேணி பகுதியில் வீடு புகுந்து பெண் மூதாளர்களைத் தாக்கி நகை மற்றும் பணங்களைக் கொள்ளையடித்தமை தொடர்பில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தியும் தாக்கியும் அவர்களிடமிருந்து 25 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் காரைநகர் – யாழ்ப்பாணம் வீதியில் சித்தன்கேணியில் வயோதிபப் பெண்கள் இருவர் மட்டும் வதியும் வீடொன்றில் இன்று அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்றதாக வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.“அதிகாலை 1.10 மணியளவில் கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த வயோதிபப் பெண்கள் இருவரையும் மிரட்டியதுடன், ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர்.

அதன்பின்னர் மற்றைய வயோதிபப் பெண் கூக்குரலிட்டதால் அவரது வாயை துணியால் கட்டிவிட்டு வீட்டை சல்லடை போட்டு தேடுதலை நடத்தியுள்ளனர்.

அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுவிட்டு வேறு நகைகள் இருந்தால் தரும்படி வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கி கொள்ளையர்கள் கேட்டுள்ளனர்.

அப்போது கொள்ளையர்களுக்குப் பயந்து போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும் அந்தப் பெண் எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வட்டுக்கோட்டை காவல்துறைக்கு சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன்மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.காவல்துறை மோப்ப நாயின் உதவியுடனே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (26) வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று காலை மோப்ப நாயுடன் சென்ற தடவியல் காவல்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதன்போது கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட ஓட்டில் காணப்பட்ட மோப்பத்தை கொண்டு காவல்துறை மோப்ப நாய் அங்கிருந்து கொள்ளையர்களைத் தேடிச் சென்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதாளர்களைத் தாக்கிய குறித்த கொள்ளைச் சம்பவம் குறித்து பலரும் தமது ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்ற நிலையில் கொள்ளையன் ஒருவன் பிடிபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad