தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான வடமராட்சி பிரதேச சபை உபதலைவர் இ. சாந்தசொரூபன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உபதலைவர் எம். லோகசிங்கம் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டனர். அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, அதாவுத செனவிரட்ண ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்.
-
25 ஆக., 2013
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான வடமராட்சி பிரதேச சபை உபதலைவர் இ. சாந்தசொரூபன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உபதலைவர் எம். லோகசிங்கம் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டனர். அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, அதாவுத செனவிரட்ண ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்.
மும்பையில் கடந்த 22-ம் தேதி இரவு புகைப்பட பெண் பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் குற்றவாளி சந்த் ஷாயிக்கை போலீசார் கைது செய்தனர்.
அதன்பின்னர் விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி நேற்று காலையில் பிடிபட்டான். அவர்கள் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், போலீசாரால் தேடப்படும் நபர்களில் 3-வது நபரான சிராஜ் ரஹ்மான் நேற்று மாலை கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் உடல்நிலை தேறி வருகிறது.
போலீசாரிடம் அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாவது:-
‘மும்பை மகாலக்ஷ்மி ரெயில் நிலையம் அருகே உள்ள சக்தி மில்லிற்கு நானும் எனது சகப்பணியாளரும் சம்பவத்தன்று மாலை 5.30 மணியளவில் புகைப்படம் எடுப்பதற்காக சென்றோம்.
அப்போது மில்லின் உள்ளே இருந்து வந்த 2 பேர் இந்தப் பாதை வழியாக போக வேண்டாம். வேறு நல்ல பாதை வழியாக அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அழைத்துச் சென்றனர்.
நாங்கள் புகைப்படம் எடுக்கும் வேலையில் மும்முரமாக இருந்தபோது உள்ளே வந்த 3-வது நபர் தன்னை ரெயில்வே ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"எங்கள் முதலாளிக்கு தெரியாமல் நீங்கள் இந்த மில்லை புகைப்படம் எடுப்பதை அவர் அறிந்து கொண்டார். உங்களை அழைத்து வரச் சொன்னார்" என்று அந்த நபர் எங்களை மிரட்டினார்.
உங்கள் முதலாளியிடம் போனில் பேசுகிறேன் என்று நான் கூறினேன். அதற்கு மறுத்த அந்நபர் தன்னுடன் வரும்படி எங்களை மீண்டும் மிரட்டினார். உடனடியாக எங்கள் பத்திரிகையின் தலைமை புகைப்பட கலைஞரை நான் செல்போனில் தொடர்பு கொண்டேன்.
அவரது லைன் ‘பிஸி’யாக இருந்தது. சற்று நேரத்தில் எனது செல்போனை மீண்டும் அவர் தொடர்பு கொண்டார். ரெயில்வே ஊழியர் என்று கூறி எங்களை ஒருவர் மிரட்டுவதாக நான் தெரிவித்தேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு வந்துவிடும்படி அவர் கூறினார்.
நாங்கள் இருவரும் வெளிவாசல் வழியாக வர முயன்ற போது குற்றவாளிகளில் ஒருவன் எங்களை வழிமறித்து தடுத்தான்.
சில நாட்களுக்கு முன்னர் அந்த இடத்தில் ஒரு கொலை நடந்ததாகவும் என்னுடன் வந்த சகப்பணியாளர்தான் அந்த கொலையை செய்ததாக கூறி அவன் எங்களை மிரட்டினான். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எங்களை மில்லின் உள்பக்கத்திற்கு இழுத்துச் சென்றனர்.
பாழடைந்த கட்டிடத்தில் நடந்தது என்ன ? கற்பழிக்கப்பட்ட மும்பை பெண் ‘போட்டோகிராபர்’ பரபரப்பு வாக்குமூலம்
எங்களை விட்டுவிடும் படி நாங்கள் கெஞ்சினோம். எங்களிடம் இருந்த கேமராவையும் 2 செல்போன்களையும் ( ஒவ்வொன்றும் சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ளது) தந்து விடுவதாகவும் நாங்கள் கூறினோம்.
அதன்பின்னர் விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி நேற்று காலையில் பிடிபட்டான். அவர்கள் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், போலீசாரால் தேடப்படும் நபர்களில் 3-வது நபரான சிராஜ் ரஹ்மான் நேற்று மாலை கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் உடல்நிலை தேறி வருகிறது.
போலீசாரிடம் அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாவது:-
‘மும்பை மகாலக்ஷ்மி ரெயில் நிலையம் அருகே உள்ள சக்தி மில்லிற்கு நானும் எனது சகப்பணியாளரும் சம்பவத்தன்று மாலை 5.30 மணியளவில் புகைப்படம் எடுப்பதற்காக சென்றோம்.
அப்போது மில்லின் உள்ளே இருந்து வந்த 2 பேர் இந்தப் பாதை வழியாக போக வேண்டாம். வேறு நல்ல பாதை வழியாக அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அழைத்துச் சென்றனர்.
நாங்கள் புகைப்படம் எடுக்கும் வேலையில் மும்முரமாக இருந்தபோது உள்ளே வந்த 3-வது நபர் தன்னை ரெயில்வே ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"எங்கள் முதலாளிக்கு தெரியாமல் நீங்கள் இந்த மில்லை புகைப்படம் எடுப்பதை அவர் அறிந்து கொண்டார். உங்களை அழைத்து வரச் சொன்னார்" என்று அந்த நபர் எங்களை மிரட்டினார்.
உங்கள் முதலாளியிடம் போனில் பேசுகிறேன் என்று நான் கூறினேன். அதற்கு மறுத்த அந்நபர் தன்னுடன் வரும்படி எங்களை மீண்டும் மிரட்டினார். உடனடியாக எங்கள் பத்திரிகையின் தலைமை புகைப்பட கலைஞரை நான் செல்போனில் தொடர்பு கொண்டேன்.
அவரது லைன் ‘பிஸி’யாக இருந்தது. சற்று நேரத்தில் எனது செல்போனை மீண்டும் அவர் தொடர்பு கொண்டார். ரெயில்வே ஊழியர் என்று கூறி எங்களை ஒருவர் மிரட்டுவதாக நான் தெரிவித்தேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு வந்துவிடும்படி அவர் கூறினார்.
நாங்கள் இருவரும் வெளிவாசல் வழியாக வர முயன்ற போது குற்றவாளிகளில் ஒருவன் எங்களை வழிமறித்து தடுத்தான்.
சில நாட்களுக்கு முன்னர் அந்த இடத்தில் ஒரு கொலை நடந்ததாகவும் என்னுடன் வந்த சகப்பணியாளர்தான் அந்த கொலையை செய்ததாக கூறி அவன் எங்களை மிரட்டினான். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எங்களை மில்லின் உள்பக்கத்திற்கு இழுத்துச் சென்றனர்.
பாழடைந்த கட்டிடத்தில் நடந்தது என்ன ? கற்பழிக்கப்பட்ட மும்பை பெண் ‘போட்டோகிராபர்’ பரபரப்பு வாக்குமூலம்
எங்களை விட்டுவிடும் படி நாங்கள் கெஞ்சினோம். எங்களிடம் இருந்த கேமராவையும் 2 செல்போன்களையும் ( ஒவ்வொன்றும் சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ளது) தந்து விடுவதாகவும் நாங்கள் கூறினோம்.
சிரியாவின் டமஸ்கஸ் நகரின் புறநகர் பகுதியில் அந்நாட்டுப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 1000 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்க செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோயுடா பிராந்தியத்தில் புறநகர் பகுதியில் இரசாயன வெடிகுண்டுகளை கொண்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தாம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது எதுவித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டு என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல:சுஷ்மா சுவராஜ்

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், காங்கிரசும், மத்திய அரசுமே காரணம் என்றும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் மீதும் அபாண்டமான அவதூறு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் இன்று (24-08-2013) கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார்.
இன்று சுவிஸ் பேர்ன் சிவன் கோவில் எனப்படும் ஞான லின்கேசுரம் தேர் திருவிழா கொட்டும் மலையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது . சிவன் தேரிலே ஆரோகணித்து அண்மையில் உள்ள மைதானம் ஒன்றுக்கு உலா வந்து இருக்க அங்கே 216 நடன நர்த்க்தகிகளின் ஒரே இணைவில் சதுர் வேள்வி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .கொட்டும் மலையிலும் கலைக்கே தம்மை அர்ப்பணித்த இந்த நர்த்தகிகளின் இறைவனை ஆடலால் குளிர்விக்கும் நிகழ்வானது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்தது
24 ஆக., 2013
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம் மாவை எம்.பியால் சாவகச்சேரியில் திறந்து வைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம், சாவகச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
செல்போனைக் கைப்பற்றினார்கள்! சிம் அட்டை எங்கே? - நளினி வழக்கறிஞர் கேள்வி- விகடன்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது!
இந்தவழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ம் திகதி ஆஜர்படுத்தபட்டார் நளினி. அப்போது, ''20 வருடங்களுக்கு மேலாக நான்
24.08.2013 சனியன்று சுவிஸ் பெர்ன் ஞானளின்கேசுரம் சிவன் கோவில் தேர்த்திருவிழ நடைபெறவுள்ளது. விசேசமாக தேர் திருவிழாவின் போது
ஆலயத்துக்கு அண்மையில் உள்ள விளையாட்டு மைதானம் வரை தேரில் உலா வருவார் ர் ஞான லின்கேஸ்வரர் பின்னர் அங்கே 216 நர்த்தகிகள் ஒரே தடவையாக பங்குபற்றி சிறப்பிக்கும் சதுர்வேள்வி என்ற நிகழ்ச்சி அற்புதமான முறையில் நடைபெற அருள்பாலித்துள்ளது
ஆலயத்துக்கு அண்மையில் உள்ள விளையாட்டு மைதானம் வரை தேரில் உலா வருவார் ர் ஞான லின்கேஸ்வரர் பின்னர் அங்கே 216 நர்த்தகிகள் ஒரே தடவையாக பங்குபற்றி சிறப்பிக்கும் சதுர்வேள்வி என்ற நிகழ்ச்சி அற்புதமான முறையில் நடைபெற அருள்பாலித்துள்ளது
அலங்காரத்திருவிழா - ஞானலிங்கேச்சுரம் 2013
15. 08. 2013 வியாழக்கிழமை முதல் 27. 08. 2013 செவ்வாய்க்கிழமை வரை
இறை அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. சைவத்தமிழ்மக்களின் மாறுபடாத அன்பு சிவமாகும். என்றும் நீங்காததும் நிலையானதுமான சிவ அன்பாகும். இராவணனால் வழிபடப்பட்ட இன்ப அன்பு ஞானலிங்கப்பெருமான், நிறைவான பேரின்பம், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சுவிஸ் நாட்டின் தலைநகராம் பேர்ண்மாநிலத்தில் எழுந்தருளி அடியவர்கள் பேரின்பத்தைப் நிறைவாகப் பெற அருள்புரிந்துள்ளான். சைவத்தமிழ்மக்கள் முன் சுவிஸ்நாட்டின் தலைநகரில் மிக விரைவில் தனக்கொரு கோவிலமைத்து இராசகோபுரத்துடன் நிலையாக எழுந்தருளும் வாய்பினையும் எமக்கு அளித்துள்ளான். நாளும் அடியர் வேண்டுவதனைத்தும் அளிக்கும் வள்ளல், முழுதிநாள்தேர்றும் நட்டம் பயின்றாடும் நாதன், நிலையான அன்புப் பிழம்பாக பேரரசி ஞானாம்பிகையுடன் திகழும் சிவமான ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் ஞானலிங்கேச்சுரத்தில் குருவருள், திருவருள் நிறைகொண்டு, சித்தர், ஞானியர், யோகியர் நல்லாசியுடன் சுற்அலங்காரத் திருவிழா நிகழும் விஜய வருடம் ஆடித்திங்கள் 31ம் நாள் முதல் ஆவணத்திங்கள் 11ம் நாள் வiர் திருப்பெரும் சிறப்புடன் நடைபெறத் திருவருள் கைகூடியுள்ளது.
காலம் | விழா |
15. 08. 13, வியாழக்கிழமை 17.00 மணிமுதல் | விநாயகர்கோமம், நவக்கிரககோமம். |
16. 08. 13, வெள்ளிக்கிழமை 16.30 மணிமுதல் | கொடியேற்றம், வரலக்குமிநோன்பு, மீனாட்சிசுந்தரேசர் திருக்கோலம் |
17. 08. 13, சனிக்கிழமை 16.30 மணிமுதல் | நாயன்மார்- திருவடிவழிபாடு |
18. 08. 13, ஞாயிற்றுக்கிழமை 16.30 மணிமுதல் | குருந்தமரத்தடி அருட்கோலம் |
19. 08. 13, திங்கட்கிழமை 16.30 மணிமுதல் | பிட்டிற்குமண்சுமந்து பிரம்படிபட்ட பொன்மேனிக்கோலம் |
20. 08. 13, செவ்வாய்க்கிழமை 16.30 மணிமுதல் | பிச்சாடனர்காடச்சி- விசாலாடச்சி விசுவநாதர் திருக்கோலம் |
21. 08. 13,புதன்கிழமை 16.30 மணிமுதல் | மாம்பழத்திருவிழா |
22. 08. 13, வியாழக்கிழமை 17.00 மணிமுதல் | வேட்டைத்திருவிழா |
23. 08. 13, வெள்ளிக்கிழமை 16.00 மணிமுதல் | சப்பறத்திருவிழா |
24. 08. 13, சனிக்கிழமை 08.00 மணிமுதல் | தேர்த்திருவிழா/ 216 மாணவியரின் நடனச்சதுர்வேள்வி/ 54 மாணவர் செந்தமிழ்த் திருக்குறள் ஓதுதல் |
25. 08. 13, ஞாயிற்றுக்கிழமை 06.30 மணிமுதல் | 6.30 மணிக்குயாகம்/ திருமஞ்சனவிழா-/ செந்தமிழ் எழுச்சிவிழா 11.00 மணிமுதல் |
26. 08. 13, திங்கட்கிழமை 16.00 மணிமுதல | திருக்கல்யாணம் |
27. 08. 13, செவ்வாய்க்கிழமை 17.00 மணிமுதல | வைரவர்மடை |
இணையிலிப்பெருமான் பேரரருட் திருவிழாவில் கலந்து பெரும்பேறு பெற்றுய்ய சிவனடியார்கள் அனைவரையும் உளமார்ந்த பக்திப் பேரன்புடன் அழைக்கின்றோம்.
ஈழத்தமிழர்களின் துன்பங்களை நேரில் அறிந்து நவநீதம்பிள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்: கலைஞர்
ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைமை ஆணையர் நவநீதம்பிள்ளை இம்மாத இறுதியில் இலங்கை செல்லவிருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், ஈழத் தமிழர்களுக்கு நியாயமாக வழங்கிட வேண்டிய அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வுரிமைகள் பற்றிய கோரிக்கை மனுக்களை ஐநா பொதுச்செயலாளரிடமும், ஐநா மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க திட்டமிடப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)