இதேவேளை, குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. “அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது, இதன் விளைவாக இலங்கை கடற்படை ஈரானிய மாலுமிகளை மீட்கத் தொடங்கியது” என்று மூன்று அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை ரொய்ட்டரிடம் தெரிவித்தனர். |