ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டியினர் இடையே தள்ளு, முள்ளு
சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசுதின விழாவில், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கையில் கோஷமிட்டதில் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் கோஷ்டியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு, முள்ளுவில் முடிவுற்றது.