புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

அழகிரி - துரைமுருகன் திடீர் சந்திப்பு : திமுகவில் பரபரப்பு
 

கட்சிக்கு ஏதிராக தொடர்ந்து செயல்பட்டுவருகிறா என்று கட்சி தலமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட் டதால்,  திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.   கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி
, தொடர்ந்து சென்னையில் தங்கியிருந்தார்.


திமுகவுக்கு எதிராக அவர் தனிக்கட்சி தொடங்குவதாக அவர் ஆதரவாளர்கள் தெரிவித்துவந்தனர்.  இந்நிலையில்,  வரும் 30ம் தேதி தனது பிறந்த நாள் மதுரையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருப்பதால், இன்று சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டார் அழகிரி.  
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு மேள தாளத்துடன் வழியனுப்பு விழா நடைபெற்றது.  அப்போது,  திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் அங்கு வந்து, அழகிரியை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நடைபெற்றது.  இந்த சந்திப்பில் இருவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
துரைமுருகனுடனான சந்திப்பு, அழகிரியின் உஷ்ணத்தை குறைக்குமா? அல்லது தனிக்கட்சி தொங்கும் திட்டத்தை தீவிரப்படுத்துவாரா அழகிரி என்பது 30ம் தேதிக்கு பிறகுதான் தெரியவரும். 
அழகிரி -துரைமுருகன் திடீர் சந்திப்பு திமுக வட்டாரத்தில் மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் 

ad

ad