புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2014

கல்லூரி மாணவியுடன் உல்லாசம் : செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வாலிபர் கைது  
தர்மபுரி பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் மாதேஷ் (23). தனியார் பால் வண்டியில் டிரைவராக
பணியாற்றி வருகிறார். கலைவாணியும், மாதேசும் உறவினர்கள். அண்ணன்-தங்கை உறவு முறையான இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அப்போது மாதேஷ் ஆசைவார்த்தை கூறி கலைவாணியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.


அதனை மறைத்து வைத்திருந்த செல்போனில் படம் பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் மாதேசுக்கு அவரது பெற்றோர் வேறு பெண்ணை பார்த்து கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணம் செய்த பின்னர், செல்போன் படத்தை காட்டி கலைவாணியை மிரட்டி அடிக்கடி டார்ச்சர் கொடுத்து உறவு வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நண்பர்கள் 3 பேரை அழைத்துச் சென்று உல்லாசமாக இருக்க வருமாறு கலைவாணியை அழைத்துள்ளார். உறவுக்கு வராவிட்டால் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும், இல்லையெனில் ரூ.10 ஆயிரம் தருமாறும் மிரட்டி உள்ளனர்.
மாதேஷின் தொடர் டார்ச்சரால் ஆத்திரம் அடைந்த கலைவாணி இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஷ், அவரது நண்பரான கொத்தனார் சக்திவேல் (25) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கார்த்திக், ஜெயபால் ஆகியோரை தேடி வருகின்றனர்

ad

ad