புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடைகள் மீளாய்வு - மங்கள சமரவீர
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=608433928019346430#sthash.9zXh7iLt.dpufபுலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடைகள் மீளாய்வு - மங்கள சமரவீரபொதுத் தேர்தலின் பின்னரே இனப் பிரச்சினைக்குத் தீர்வு - மைத்திரி திட்டவட்டம்
மஹிந்த அரசின் காலத்தில்
தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை
மீளாய்வு செய்யவுள்ளதாக, மைத்திரி அரசின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு மீள
இணைகின்றார்கள் என்று சொல்லப்படுவது ஒரு உளநோய் என்றும் அவர் சாடியுள்ளார்.
மஹிந்த அரசின் காலத்தில், ஐ.நா. ஒழுங்கு விதிகளின் கீழ், கடந்த ஆண்டு
மார்ச் மாதம் வெளி யிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 424
தனிநபர்களும், 16 புலம் பெயர் அமைப்புகளும், தீவிரவாத நிதியளிப்புடன்
தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் மீது இலங் கையில் தடை
விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போதைய புதிய அரசு
இவர்கள் மீதான தடையை மீளாய்வு செய்யவுள்ளது. இது தொடர்பில்
நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள
சமரவீர,விடுதலைப் புலிகள் மீள இணை கின்றார்கள் என்று சொல்லப்படு வது ஒரு
உளநோய். அதன் காரண மாகவே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதற்கமைய பல
புலம் பெயர் தமிழ் அமைப் புகளுக்கு, விடுதலைப் புலி களுடன் தொடர்பு
இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டது. என்று கூறினார்.
இவ்வாறு பட்டியலிடப்பட்ட பெரும் பாலான
அமைப்புகள், வெறுமனே தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவையாக
இருக்கக் கூடும். அவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்
பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்தப் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ள சிலர், சில காலங்களுக்கு முன்னரே உயிரி ழந்து விட்டனர்.
என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நல்லிணக்கச் செயல்முறைகளை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இந்தக்
கட்டத்தில், தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை
குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள் ளது. புலம்பெயர் இலங்கையர்கள்
அவர்கள் சிங்களவர்களாக, தமிழர்களாக, முஸ்லிம்களாக யாராக இருந்தாலும்,
அவர்கள் எமக்கு முக்கியமானவர்கள். என்றும் அவர் கூறினார்.
நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு
மட்டுமன்றி, நாட்டை முன்நோக்கி நகர்த்திச் செல்வதற்கும் அவர்களின்
பங்களிப்பு அவசியம். சிலர் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களாக
இருக்கின்றனர். பலர் விஞ்ஞானிகளாக, சட்டவாளர்களாக, ஏனைய துறைசார்
நிபுணர்களாக
இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.