புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2015

 நடிகர் அஜித்துக்கு திடீர் அறுவை சிகிச்சை 
நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தை கௌதம்மேனன் இயக்கியிருந்தார். 

இதற்கிடையில், அஜித்-ஷாலினி தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. தற்போது, குழந்தையையும், ஷாலினியையும் அன்போடு கவனித்து வரும் அஜித்துக்கு கடந்த சில நாட்களாகவே சைனஸ் பிரச்சினை இருந்து வந்தது. 

இதற்காக மருத்துவரை அணுகிய அஜித்தின் மூக்கில் சதை வளர்வதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம் என மருத்துவர்கள் அவரிடம் கூறினர். இதையடுத்து சைனஸ் பிரச்சினைக்கான அறுவை சிகிச்சையை எடுத்துக் கொண்டுள்ளார் அஜித். 

இவரது மூக்கில் வளர்ந்துள்ள சதையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். இந்த சிகிச்சையை இஎன்டி மருத்துவரான எம்.கே.ராஜசேகர் மேற்கொண்டார். சிகிச்சைக்கு பிறகு அஜித் பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad