புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2013


வேலூர் கோர்ட்டில் போலீஸ் பக்ருதீன் ஆஜர்
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீனை, சென்னை பெரியமேட்டில் வெள்ளிக்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர். போலீஸ் பக்ருதீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் பக்ருதீன், வேலூர் 3வது குற்றவியல்
கோர்ட்டில் சனிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டார்.

போலீஸ் பக்ருதீன் நண்பர் அப்துல் ரகீம் என்பவர், ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனை, நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுதாகரன் மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், போலீஸ் பக்ருதீனை போலீசார் கைது செய்து தற்போது வேலூரில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலீஸ் பக்ருதீன் கைது செய்தது தொடர்பான அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

ad

ad