புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2014

ஜனாதிபதியிடம் கையும் களவுமாக மாட்டிய அமைச்சரும் பா.உறுப்பினரும்
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகிய இருவருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளார்.
இதில் அவர்கள் இருவரும் ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்தது தெரிய வந்துள்ளது. இந்த ஒலிப்பதிவு நாடாவை அரச புலனாய்வு சேவைத் தலைவரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்திரா நிமால் வஜிஸ்டா, ஜனாதிபதியிடம், ஒப்படைத்துள்ளார்.
இதனால் பொறுமையை இழந்த ஜனாதிபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் வஜிஸ்டாவிடம், இவ்விருவரும் யார் யாரிடம் தொடர்பு வைத்து உள்ளனர் என்பதை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, புலனாய்வு அதிகாரி வஜிஸ்டா, விசாரணை மேற்கொண்ட பின்பு அளித்த அறிக்கையில்,
இவ்விருவருக்கு, மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, ஏ.எச்.எம் பௌசி, ஜனக பண்டார தென்னக்கோன், துமிந்த திசாநாயக்க, ஜோன் செனவிரத்ன, மேர்வின் சில்வா, பியசேன கமகே, முன்னாள் பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மற்றும் அவரது மகன் விதுர விக்கிரமநாயக்க, அகியவர்களிடம் ரகசியமாக தொடர்புள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த இருவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜயசூரிய மற்றும் மங்கள சமரவீர அவர்களின் கூட்டாளிகள் மூலம் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு இடையில், ஜனாதிபதி மகிந்த, புலனாய்வு அதிகாரி வஜிஸ்டாவை, பாதுகாப்பு செயலாளர் நந்தசேன கோத்தபாய, தென் கொரியாவிற்கு அனுப்பிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் செயலை கண்கானிக்கும் படி கூறியுள்ளார்.
நந்தசேன கோத்தபாய தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன், நகர அபிவிருத்தி அதிகாரியாக அனுர சேனநாயக்க பொறுப்பு ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad