ஜ.ம.மு.வில் மனோ, குகவரதன் ஐ.தே.க.வில் மரிக்கார், முஜிபுர்
மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாமிடத்தை பெற்றுள்ளதாக நேற்றிரவு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அக் கட்சியின் சார்பில் சண். குகவரதன் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மஞ்சு ஸ்ரீ அரங்கல, எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர் ரகு
மான், எம்.எஸ்.எம். பைரூஸ்ஹாஜி ஆகியோர் விருப்பு வாக்குகளின்
அடிப்படையில் முன்னிலைப் பெற்றிருந்தனர்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட அர்ஷாட் நிசாமுதீனும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஏ.ஜே.எம்.பாயிஸ் ஆகியோரும் முன்னிலை அடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜகத் விதான (29,920) வாக்குகளை பெற்று முதலாம் இடத்தினையும், ஜ. ஜெமில் (24,576), ஜி.பீ. அபேரட்ன (20,797) வாக்குகளைப் பெற்று இரண்டாம் மூன்றாம் இடத்தினையும் பெற்றிருந்தனர்.
ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிந்திர யஸஸ் (12,885), அருணா தீபால் (12,569) முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்றதோடு மக்கள் விடுதலை முன்னணியின் நலிந்த ஜயதிஸ்ஸ (11,949) முதலாமிடத்தையும் பெற்றுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹர்சன ராஜகருணா (51,018) விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாமிடத்தினையும், கவிந்த ஏசான் (41,654), எட்வேட் குணசேகர (29,944), ஜோர்ச் பெரேரா (29,703) பெற்று முறையே இரண்டாம் மூன்றாம் நான்காம் இடங்களை தமதாக்கிக்கொண்டனர்.
ஆளும், எதிர்க்கட்சியின் அபேட்சகர்கள் சிலர் தமக்கு கிடைத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையில் அதிருப்தி அடைந்ததன் காரணத்தால் விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் நள்ளிரவைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையிலேயே பத்திரிகை அச்சேறும் வரை கிடைக்கப்பெற்ற முடிவுகளே இவை என்பது குறிப்பிடத்தக்கது.