ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணையை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு ஒத்துழைப்பு வழங்கவோ போவதில்லை என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு, துரதிஸ்டவசமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா விசாரணைக்குழு தமது அரசாங்கத்தின் அனுமதியின்றி நாட்டுக்குள் வரமுடியாது, என்றும், அதனுடன் அரசாங்கம் ஒத்துழைக்காது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா. சம்பந்தன்,
ஐ.நாவினால் மேற்கொள்ளப்படவுள்ள அனைத்துலக விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருப்பது நல்ல முடிவல்ல.
இந்தத் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். |