புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014

செந்தூரனை பார்வையிட அவரது மனைவிக்கு சென்னை மேல் நீதிமன்றம் அனுமதி
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈழ அகதி செந்தூரனை சந்திக்க அவரது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மேல் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறது.
செந்தூரன் கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி முதல் தமது விடுதலைக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து வேலூர் அரச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அவரை பார்ப்பதற்கு அவரது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் செந்தூரனின் மனைவி மங்கையர்க்கரசி, சென்னை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமது கணவருக்கு சாதகமாக இந்த வழக்கினை மாற்றி எழுதுவதற்கு, சிறைச்சாலைகள் அதிகாரிகள் தம்மிடம் 2 லட்சம் ரூபாய்களை லஞ்சமாக கேட்டதாகவும், அதற்கு மறுத்ததால் அவருக்கு எதிராக வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பான வழக்கினை பதிவு செய்ததாகவும் தெரிவித்து, மங்கையர்க்கரசி தனி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு வாரங்களில் அறிக்கைப்படுத்த வேண்டும் என்றுமை், தமிழக காவற்துறை திணைக்களத்துக்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ad

ad