புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014


ஆளும் கட்சிக்குள் தொடர்ந்தும் பிரச்சினை
ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் கடைமட்ட உறுப்பினர்கள் மத்தியில் தொடர்ந்தும் அதிகாரப் போட்டிகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி உயர்கல்வி அமைச்சருமான நந்திமித்ர ஏக்கநாயக்கவின் செயலாளரை நேற்று மத்திய மாகாண சுகாதார அமைச்சர் கூட்டம் ஒன்றுக்கு அனுமதிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுமதியின்றி இந்தக் கூட்டத்துக்கு வந்ததாக கூறியே அமைச்சரின் செயலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சுகாதார அமைச்சர் யேலகமவே தாமே அரசியலுக்கு அழைத்து வந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதி உயர்கல்வி அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க, அவர் பழையதை மறந்து செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்

ad

ad