புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014

இலங்கை அணியை புறக்கணித்த மலிங்கா 
 இந்தியாவில் செப்ரெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளார்.

 
இலங்கை அணியான சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்கு விளையாடப்போவதில்லை என்று மலிங்கா அறிவித்துள்ளார்.
 
இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலர் நிஷந்த ரணதுங்கா இது பற்றிக் கூறுகையில் நாங்கள் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்கு விளையாடுவதை விரும்பினோம் ஆனால் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் சாம்பியன்ஸ் லீக் இடையேயான ஒப்பந்தத்தின் படி வீரர்கள் தங்கள் விருப்பப்படி அணியைத் தெரிவு செய்து கொள்ளலாம் அதன் படி மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
 
சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி இலங்கை உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சாம்பியன் அணியாகும். இதன் அணித்தலைவர் மலிங்கா என்பதும் குறிப்பிடத்தக்கது

ad

ad