புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014

எனது பதவியை ரத்துசெய்துவிடுங்கள் - பிரதமர் டி. எம். ஜயரத்ன 
நாட்டுக்குப் பிரதமர் பதவி தேவை இல்லை. எனவே தற்போதைய பிரதமர் பதவியை ரத்துச் செய்ய வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட யோசனையாகும் என பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறியுள்ளார்.
 
இந்த நாட்டை சுதந்திர அபிவிருத்தி நாடாகக் கட்டி எழுப்ப வேண்டுமானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்ந்தும் நாட்டுக்குத் தேவையென பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறியுள்ளார். 
 
நாட்டைப் பாதுகாக்க நிறைவேற்று ஜனாதிபதி பதவி அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார். ஜனாதிபதி பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி நாட்டில் தவறான கருத்தை உருவாக்கி உள்ளது. 
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி பதவி வேட்பாளருக்கு முகம் கொடுக்க முடியாமையினால் பொது வேட்பாளர் பற்றி எதிர்க் கட்சி கனவு காண்கின்றது.
 
நாட்டிலுள்ள ஒரே பொது வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. நாட்டில் சகல அரசியற் கட்சிகளுடனும் சகல மக்கள் பிரிவினருடனும் ஒத்துழைப்புடன் செயற்படும் ஒரே அரசியல்வாதி ஜனாதிபதி என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ad

ad