புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2016

கொள்ளையில் ஈடுபடும் பெண் தொடர்பாக பொலிஸ் எச்சரிக்கை

யாழ்ப்பாணதத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளம்பெண் தொடர்பான தகவ
ல்களை உடனடியாக வழங்குமாறு
பொதுமக்களை சுன்னாகம் பொலிஸார் வேண்டியுள்ளனர்.

சுமார் 22 வயது மதிக்கத்தக்க சொந்த முகவரி அற்ற குறித்த பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு இலட்சத்திற்கு அதிகமான பணம்,நகைகளை கொள்ளையிட்டு மறைந்து வாழ்வதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்போது கொழும்பு புறநகர் பகுதியில் நடமாடி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தேக நபரான தேனுகா ரவீந்திரன்(வயது22) என்பவர் பல இளைஞர்களை தொடர்புகொண்டு பல இலட்சங்களை திருடி தலைமறைவானார்.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0212240323 என்ற தொலைபேசி ஊடாக தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

ad

ad