1983 ஆம் ஆண்டு கறுப்பு இதே நாளில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராட்ட முன்னேடிகளான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் மற்றும் அவ் இனக்கலவர வாரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட இனவாததத் தாக்குதல்களையும் உயிர்நீத்த பொது மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலிக்கப்பட்டது.
அஞ்சலி செலுத்துவதற்கான பொது ஈகைச்சுடர் தவிசாளரினால் ஏற்றப்பட்டதுடன் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கைகளில் மெழுவர்த்தியை ஏந்தியவாறு அஞ்சலித்தனர்.
தொடர்ந்து இனியொரு கறுப்பு யூலை வேண்டாம். இனவாதம் அரச இயந்திரம் முதல் சிவில் சமூகங்கள் வரையில் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளில் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உரைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது