புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2019

சுமந்திரனே பொறுப்புக்கூற வேண்டும்! -மகிந்த ராஜபக்ச

வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபையை இறுதியில் இன்று இல்லாதொழித்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இதற்கு சுமந்திரன் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபையை இறுதியில் இன்று இல்லாதொழித்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இதற்கு சுமந்திரன் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று செயற்பட நினைத்ததாக பலர் குறிப்பிடுகின்றனர். நான் அதனை இன்றும் ஏற்றுக்கொள்கின்றேன்.நான் இதனூடாக நாடாளுமன்றில் இரண்டாவது சபை ஒன்றை ஏற்படுத்தி பிரதேச சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு தீர்மானித்தேன். அதற்கு வெளிநாட்டு பிரதிநிதிகளே 13 பிளஸ் என பெயரிட்டனர்.

நான் 13 பிளஸ் தொடர்பில் பேசியது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த அறிக்கையைப்போல் நாட்டை ஒன்பதாக பிரிக்கும் செயற்பாடு அல்ல. பிரதமர் மன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கும், தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வதற்கும் சில விடயங்கள் காணப்பட்டது உண்மைதான்.

எனினும் அந்த தேர்தல் முறை மாற்றத்தை கொண்டு வந்தவர்களே அதற்கு எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். ஆகவே அதற்கு நாம் இணக்கம் தெரிவிக்க முடியாது.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நாடாளுமன்றில் சமர்ப்பித்த அறிக்கை எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலரால் உருவாக்கப்பட்டது என ஒரு பேச்சு காணப்படுகின்றது.இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு குறித்த அறிக்கை தம்முடையது அல்லவென பிரதமர் குறிப்பிட்டார்.

ஆகவே இறுதியில் பார்க்கையில் அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏமாற்று வேலையை செய்திருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். கடந்த நான்கு வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடித்த நாடகமும் இல்லை, அடித்த தாளமும் இல்லை.

சுமந்திரன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வரைபுகளை தனிநாடு என்ற விடயத்தை உள்ளடக்கியே உருவாக்குவார். அவர்களது நோக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை தமிழ்க் கூட்டமைப்பு இல்லாது செய்துள்ளது. தேர்தல் முறை மாற்றத்திற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்போவது இல்லை.

வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபையை இறுதியில் இன்று இல்லாதொழித்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இதற்கு சுமந்திரன் பொறுப்புக்கூற வேண்டும்.

நான் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தினேன். 2013ஆம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினேன். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அதனை இல்லாதொழித்துள்ளது.

வடக்கு கிழக்கு இளைஞர்கள் தம்முடைய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் தெரிவிக்கையில் முதலில் விடுதலையை பெற்றுக்கொண்டு பின்னர் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் எனத் தெரிவித்துள்ளதாக செய்திகள் அறியக் கிடைக்கின்றன.

இதற்காகவே அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது. எனினும் அவர் விடுதலையும் பெறவில்லை. மக்களுக்கு எதுவும் கிடைக்கவும் இல்லை. தமிழ் மக்கள் வடக்கு கிழக்கை தனியாக நிர்வகிப்பதே அவர்கள் விடுதலை என குறிப்பிடுகின்றனர்.

நான் 2014ஆம் ஆண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்தேன். பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டனர்.

19ஆவது திருத்தச் சட்டத்தின் குழு கூட்டத்தின் போது எவருக்கும் தெரியாமல் வரைபில் காணப்பட்ட வார்த்தைகளை அகற்றினர். அதனால் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையின் காரணமாக எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் யாப்பு திருத்தத்திற்கு இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இயலாது.

அதேபோல் அரசாங்கத்தின் இறுதி காலத்தில் யாப்பு திருத்தம் தொடர்பில் பேசி பிரயோசனம் இல்லை. ஆகவே மக்களின் வாக்குகளினால் புதிதாக உருவாகும் அரசாங்கமே அந்த விடயத்தை செயற்படுத்த வேண்டும்.அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது யாப்புத் திருத்தம் தொடர்பில் நாம் முன்மொழிவுகளை வைக்கவுள்ளோம். புதிய அரசாங்கத்தின் ஊடாக யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்க்கின்றோம்.

மக்கள் வாக்கெடுப்பின்றி யாப்பினை மாற்றியமைப்போம் என மக்களை ஏமாற்ற மாட்டோம். புதிய யாப்புத் தொடர்பில் மக்கள் வாக்கெடுப்பை நடத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

ad

ad