புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2019

அதிரடி முடிவு - மகிந்தவுக்கு எச்சரிக்கை

பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தனித்து தீர்மானங்களை எடுத்தால், சுதந்திர கட்சியும் அதிரடியான தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர பொதுஜன பெரமுனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தனித்து தீர்மானங்களை எடுத்தால், சுதந்திர கட்சியும் அதிரடியான தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர பொதுஜன பெரமுனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று புதன்கிழமை கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி- பரந்துப்பட்ட கூட்டணி தற்போது எந்த அளவிற்கு வெற்றிப் பெறும் நிலையில் காணப்படுகின்றது.

பதில்- இரு தரப்பின் பேச்சுவார்த்தைகளும் இதுவரையில் திருப்தியளிக்கும் விதத்திலே காணப்படுகின்றது. இருப்பினும் ஒரு சில விடயங்கள் மாத்திரம் இழு பறி நிலையில் காணப்படுகின்றது.

கேள்வி- பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில்- பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் ஊடாகவே உத்தேச தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் பேசப்படவில்லை. இருப்பினும் அதுவே மிக முக்கிய காரணியாக காணப்படுகின்றது. பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுக் கொண்டு அவர்கள் தனித்து செயற்பட முடியாது. ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவித்த பிறகு அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது பயனற்றதாகவே காணப்படும். இதுவரையில் இவ்விடயம் தொடர்பில் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை. ஒருவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அவர்கள் மாத்திரம் தனித்து தீர்மானித்தால் சுதந்திர கட்சியும் சில அதிரடியான தீரமானங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்.

ad

ad