.jpg)
தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அரசவை அமர்வினை மேற்கொள்ள முடியாத நிலையில், இணையவழி சிறப்பு அரசவை அமர்வு இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வில் தொடக்க நாள் நிகழ்வில் இணையவழி காணொளி மூலமாக ஈழத்தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைக்குமான போராட்டத்துக்கு தமது தோழமையினை இவர்கள் தெரிவிக்க இருக்கின்றனர்.
'இந்தியப் பெருங்கடல் புவிசார் பூகோள அரசியலில் தமிழர்களை ஒரு தரப்பாக மாற்றுதல்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற இருக்கின்ற இந்த அமர்வுகளின் போது அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்கள் உரைகள், கேள்வி பதில், தீர்மானங்கள் என பல்வேறு விடயங்காக இடம்பெற இருக்கின்றன.
நேரடி அரசவை அமர்வுக்குரிய விடயங்களோடு இடம்பெற இருக்கின்ற இரண்டு நாள் நிகழ்வுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் tgte.tv வலைக்காட்சியில் காண முடியும்.
.jpg)