புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2020

சரத் பொன்சேகாபுலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள்-சிவாஜிலிங்கம்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உங்களுக்கு நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

புரெவிப் புயல் மாவீரர் நாள் காலப் பகுதியில் வடக்கு- கிழக்கில் தாக்கியிருந்தால் தான் மகிழ்ந்திருப்பேன் என்று சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்அதேபோன்று ஆறாயிரம் பேரே இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஐக்கிய நாடுகள் சபை இரண்டு கட்டங்களாக வெளியிட்ட அறிக்கையில் இறுதிப்போரில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் 80 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

சரத் பொன்சேகா தற்போது சொல்லியிருக்கின்ற கருத்தின் மூலம் அவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான எண்ணம் கொண்டவர் விடுதலைப்புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என்று தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள் என்று தெரிவித்த சிவாஜிலிங்கம், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ் மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலின் போது கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், உங்களுக்கு நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.இதேவேளை சஜித் பிரேமதாஸவும் இதே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு கோரியிருந்ததையும் சிவாஜிலிங்கம் நினைவுபடுத்தினார்.

ad

ad